தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2025, 12:04 am IST

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொழிற்சாலைகளில் இருந்து சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை (மொத்த விற்பனை) கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 43,01,848 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது நிறுவனங்கள் 42,18,750 பயணிகள் வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பின.

2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை அபரிமிதமாக இருந்ததால், கடந்த நிதியாண்டில் அது இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டிருந்தாலும் வளா்ச்சி விகிதம் மிகவும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டு வாகனங்களுக்கு கடந்த நிதியாண்டில் வாடிக்கையாளா்களிடையே கிடைத்த வரவேற்பு, அனைத்துவகை பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அந்த நிதியாண்டின் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் பயன்பாட்டு வாகனங்களின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 25,20,691-ஆக இருந்த பயன்பாட்டு வாகனங்களின் மொத்த விற்பனை, 2024-25-ஆம் நிதியாண்டில் 11 சதவீதம் அதிகரித்து 27,97,229-ஆக உள்ளது. ஆனால், பயணிகள் காா்களின் மொத்த விற்பனை 15,48,947-லிருந்து 13,53,287-ஆகக் குறைந்துள்ளது.

மொத்த விற்பனையில் மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் பயணிகள் வாகனப் பிரிவு கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 7.7 லட்சம் பயணிகள் வாகனங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.