குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42% உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 10:15 pm IST

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்ய தனது வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.3,269 கோடியாக இருந்தது.

அதன் சமீபத்திய முதலீட்டாளர்களின் கூட்டத்தில், நிறுவனத்தின் கடன் பங்கு 0.19 சதவிகிதத்திலிருந்து 0.26 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி ரீதியாக, கோத்ரெஜ் பிராபர்டீஸ் சமீபத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவிகிதம் அதிகரித்து ரூ.598.40 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.518.8 கோடியாக இருந்தது.

மொத்த வருமானம், 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் ரூ.1,620.34 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.1,699.48 கோடியாக இருந்தது.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.6,967.05 கோடி மொத்த வருமானத்தில் ரூ.1,389.23 கோடி நிகர லாபமாக பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.