கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

ஷாவ்மி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஷாவ்மி பேட்டரிகள் தள்ளுபடி விலையில்...

ஷாவ்மி பேட்டரிகளுக்கு தள்ளுபடி - X / Xiaomi

Published On :27 ஆகஸ்ட் 2025, 10:28 am IST

ஷாவ்மி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஷாவ்மி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது. நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்த நிலையில், ஷாவ்மி இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 25 முதல் 30 ஆம் தேதி வரை பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரமாக (கேர் அண்ட் கனெக்ட்) கொண்டாடி வருகின்றது.

இதனை முன்னிட்டு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஷாவ்மி மற்றும் ரெட்மி மாடல் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பிரச்னைகளால் அவதிப்படும் வாடிக்கையாளர்கள் 50 சதவிகிதம் தள்ளுபடி விலையில் புதிய பேட்டரிகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும், பேட்டரி மாற்றப்படும் ஸ்மார்ட்போன்களின் சாஃப்ட்வேர் இலவசமாக அப்டேட் செய்யப்பட்டு, போனின் ஹெல்த் செக் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை பெற அருகாமையில் இருக்கும் ஷாவ்மி சேவை மையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

Summary

50% discount on Xiaomi batteries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.