ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

அமெரிக்க ரிசர்வ் கொள்கை முடிவுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் கவனமும், அதே வேளையில் ரூபாயின் பலவீனம் அதிகரிப்பதாலும், வரும் வாரத்தில் தங்கத்தின் விலை உறுதியாகவே இருக்கும்.
தங்கம்
தங்கம் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுதில்லி: அமெரிக்க ரிசர்வ் கொள்கை முடிவுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் கவனமும், அதே வேளையில் ரூபாயின் பலவீனம் அதிகரிப்பதாலும், வரும் வாரத்தில் தங்கத்தின் விலை உறுதியாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வட்டி விகிதக் குறைப்பு மற்றும் மத்திய வங்கி கொள்முதல்கள் தொடர்ந்து நிகழும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கம் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.

வர்த்தகர்கள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கூட்ட முடிவு குறித்தும் அதே வேளையில் ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் கருத்து குறித்து கவனம் செலுத்தி வருவதால் தங்கம் தற்போதைய சூழ்நிலையில் நேர்மறையாக இருக்கும்.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், இந்த வாரம் தங்கம் ரூ.958ஆக உயர்ந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலை காமெக்ஸ் சந்தையில் உயர்ந்துள்ளன. அதே வேளையில், சர்வதேச சந்தைகளில், காமெக்ஸ் தங்கம் வணிகம் இந்த வாரத்தில் 11.9 அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 26% உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com