கடும் சரிவில் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7 லட்சம் கோடி இழப்பு!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
Indian stocks
கோப்புப்படம்IANS
Updated on
1 min read

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,624.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 609.68 (0.71%) புள்ளிகள் குறைந்து 85,102.69 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் சரிவைச் சந்தித்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி 225.90(0.86%) புள்ளிகள் குறைந்து 25,960.55 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பங்குகளில் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எட்டர்னல், டிரென்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸில் டெக் மஹிந்திரா மட்டும் 1.3% வரை லாபத்தைப் பெற்றுள்ளது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.83 சதவீதமும் ஸ்மால் கேப் குறியீடு 2.6 சதவீதமும் சரிந்தன. நிஃப்டி 50 பங்குகளில் 46 பங்குகள் சரிந்து முடிந்துள்ளன.

காலையில் ஐடி, மெட்டல் குறியீடுகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் அனைத்துத் துறைக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. அதிகபட்சமாக நிஃப்டி ரியல் எஸ்டேட் 3.5% வரை சரிந்தன. பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா 2% வரையிலும் குறைந்தபட்சமாக ஐடி பங்குகள் 0.29 சதவீதமும் சரிந்து நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக சரிவால் சுமார் ரூ. 7 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்றது இன்றைய சந்தை சரிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

Summary

Stock market: Sensex sinks 610 pts, Nifty below 26,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com