

புதுதில்லி: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.1,905 கோடியைத் திரட்டியுள்ளதாக தெரிவித்தது.
ஹட்கோ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கிற நிலையில், செபி-யால் கட்டாயமாக்கப்பட்ட மின்னணு ஏலத் தளத்தில், 7 ஆண்டு காலப் பத்திரங்களை 6.98% வட்டி விகிதத்தில் வெளியிட்டதன் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஹட்கோவின் தலைவர் சஞ்சய் குல்ஷ்ரேஸ்தா இது குறித்து தெரிவித்ததாவது:
நம்பகமான, நீடித்த மற்றும் மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவதை உறுதிசெய்யும் நோக்குடன், செலவுகளை குறைப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. இதன் மூலம், 2047 ஆம் ஆண்டிற்கான விக்சித் பாரதத்திற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கு நிறுவனம் துணைபுரிகிறது.
இதையும் படிக்க: மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் வெள்ளி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.