2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.70ஆக நிறைவு!

ரூபாய் தனது ஆரம்பகால ஆதாயங்களை இழந்து, டாலருக்கு நிகரான 3 காசுகள் சரிந்து ரூ.89.70 என்ற அளவில் வர்த்தகமானது.

PTI Graphics

Published On :

மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் தனது ஆரம்பகால ஆதாயங்களை இழந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான 3 காசுகள் சரிந்து ரூ.89.70 என்ற அளவில் எதிர்மறை நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது சந்தை உணர்வை பாதித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.89.53 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு ஒரு கட்டத்தில் ரூ.89.45 என்ற நாளின் உச்சத்தைத் தொட்டு, முந்தைய நாள் முடிவிலிருந்து 22 காசுகள் உயர்ந்தது. வர்த்தக முடிவில், ரூபாய் முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.89.70 ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகரான 53 காசுகள் உயர்ந்து ரூ.89.67 என்ற அளவில் இருந்தது.

Summary

The rupee pared initial gains and settled for the day in the negative territory, down 3 paise at 89.70 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.