இந்திய மின்சார வாகனச் சந்தையில் கோலோச்சி வரும் டாடா மோட்டார்ஸின் புதுவரவாக புத்தாண்டில் புதிய ரக மின்சார கார்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கதாக, 2026-ஆம் ஆண்டு இறுதியில் டாடா அவின்யா எக்ஸ் அறிமுகமாகும் என்று டாட்டா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொகுசுக் கார்கள் பிரிவைக் குறிவைத்து டாடா அவின்யா எக்ஸ் வடிவமைக்கப்படுகிறது. டாடாவின் புது ஜென் 3 இவி வடிவைப்பில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்காகவே பிரத்யேகமான ஸ்கேட்போர்டு ஸ்டைல் தளத்தில் கட்டமைக்கப்படுகிறது.
சொகுசுக் கார்கள் பிரிவில் சந்தைப் போட்டியைச் சமாளிக்க குறைவான விலையில் டாட்டா களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால், இதன் விலை ரூ. 22 லட்சம் முதல் ரூ. 35 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம் என்றும் டாட்டா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
வாடிக்கையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் சியரா இவி 2026இல் சந்தைக்கு வர தயாராக உள்ளது.
இந்திய மின்சார கார்கள் சந்தையில்
நெக்ஸான் இவி
ஹாரியர் இவி
பஞ்ச் இவி
டியாகோ இவி
கர்வ் இவி ஆகிய கார்களின் மூலம் வாடிக்கையாளர்களின் முதன்மை விருப்பத் தேர்வாக மாறியிருக்கும் டாடா மோட்டார்ஸ், இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக, நெக்ஸான் இவி இந்தியாவில் ஒரு லட்த்துக்கும் மேல் விற்பனையாகியிருப்பது, இந்திய மின்சார வாகனச் சந்தையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், அதிகரித்து வரும் மின்சார வாகன விற்பனையைக் கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்கள் சார்ஜிங் ஏற்ற வசதியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஒரு லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
Summary
Tata Avinya will launch Avniya in the country by the end of 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 10,000 கோடியில் கேரளத்தில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும் டாடா!

டாடாவுக்கு போட்டியாக ரூ. 5 லட்சத்தில் மாருதியில் புதிய கார்!

3,400 மின்சார வாகனங்களுக்கான ஆர்டரை வென்ற டாடா மோட்டார்ஸ்!

ரூ. 4.69 லட்சத்தில் டாடாவின் புதிய டியாகோ ஹேட்ச்பேக்!
விடியோக்கள்

அரைகுறையாக நிற்கிறதா வள்ளுவர் கோட்ட தேர்? | Valluvar Kottam |



