ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.
ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!
Updated on
1 min read

புதுதில்லி: ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.

இந்த திட்டத்தின் 'பி' பிரிவின் கீழ், மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்தது.

பிஎம் குசும் பி திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டிய கூடுதல் 6,500 ஆஃப்-கிரிட் சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளுக்கான தகுதி சான்றிதழை மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் 6,500 சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளின் மொத்த மதிப்பு, ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.180 கோடி என்றது.

2019ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியன் திட்டமானது, மார்ச் 2026 க்குள் 34,800 மெகாவாட் சூரிய சக்தியை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.89.79-ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com