5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 7:58 pm IST

புதுதில்லி: ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.

இந்த திட்டத்தின் 'பி' பிரிவின் கீழ், மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்தது.

பிஎம் குசும் பி திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டிய கூடுதல் 6,500 ஆஃப்-கிரிட் சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளுக்கான தகுதி சான்றிதழை மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் 6,500 சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளின் மொத்த மதிப்பு, ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.180 கோடி என்றது.

2019ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியன் திட்டமானது, மார்ச் 2026 க்குள் 34,800 மெகாவாட் சூரிய சக்தியை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.