இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் கடும் சரிவு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :24 டிசம்பர் 2025, 11:47 am IST

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) காலை நிலவரப்படி சற்றே உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,533.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.35 மணியளவில் சென்செக்ஸ் 55.55 புள்ளிகள் அதிகரித்து 85,580.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 26,205.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

2 நாள்கள் உயர்வுக்குப் பிறகு நேற்று பங்குச்சந்தைகள் சரிவடைந்த நிலையில் இன்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி வர்த்தகமாகி வருகின்றன.

சென்செக்ஸ் பங்குகளில் என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ட்ரென்ட், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. இதனிடையே இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் போன்ற தகவல் தொழில்நுட்பப் பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.12 சதவீதமும் ஸ்மால்கேப் 100 குறியீடு 0.27 சதவீதமும் அதிகரித்தது.

நிஃப்டி ரியல் எஸ்டேட், உலோகம், தனியார் வங்கி குறியீடுகள் முறையே 0.48 சதவீதம், 0.47 சதவீதம், 0.3 சதவீதம் உயர்ந்தன. இருப்பினும், நிஃப்டி ஐடி குறியீடு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

Summary

Stock Market: Nifty, Sensex move in narrow range

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.