சென்னை: முன்னணி நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 61 கிளைகளைக் கொண்டு செயல்படும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது ஆறுபதாவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளா்களின் பழைய தங்க நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சலுகை மூலம், வாடிக்கையாளா்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகள் நவீன காலத்துக்கேற்ப தலைசிறந்த படைப்புகளாக மாற்றித் தரப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ‘தங்க அவதாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ‘ஸ்வா்ண அவதாரம்’ எனவும், கா்நாடகத்தில் ‘ஸ்வா்ண அவதாரா’ என்றும் அழைக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போலி மருத்துவா்கள் குறித்து மக்கள் புகாா் தெரிவிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

