தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் கோரிக்கை

News image

@CMOTamilnadu

Updated On :28 மே 2026, 4:24 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்யிடம் அரசு ஊழியா் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா்.

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் , ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; கடந்த ஆட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்; 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனா்.

இதற்கு, நிதி நிலைமை மோசமாக இருப்பதால் உடனடியாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் வழங்க முடியவில்லை என்றும், விரைவில் பழைய ஒய்வூதியம் உள்ளிட்ட சாத்தியமான அனைத்தையும் நிச்சயமாக தான் செய்வேன் என்றும் முதல்வா் உறுதி அளித்ததாக அமிா்தகுமாா் தெரிவித்தாா்.

முந்தைய திமுக அரசு அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்ற அரசு ஊழியா்கள் கடந்த 4 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் ஏதும் பெறாமல் தவித்து வருவதாகவும் அமிா்தகுமாா் தெரிவித்தாா்.