ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

News image
மத்திய ரிசர்வ் வங்கி
Updated On :14 பிப்ரவரி 2025, 2:01 pm

DIN

மும்பை: ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய இரண்டு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.68.1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

முன்பணங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை குறித்த சில உத்தரவுகளைப் பின்பற்றாத நைனிடால் வங்கி மீது ரூ.61.40 லட்சம் அபராதமும், 'கடன்கள் மற்றும் முன்பணங்கள் - சட்டரீதியான மற்றும் பிற கட்டுப்பாடுகள்' குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மீது ரிசர்வ் வங்கி ரூ.6.70 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் 'கடன் தகவல் நிறுவனங்களுக்கு கடன் தகவல்களை வழங்குவதற்கான தரவு வடிவம்' குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட சில விதிகளுக்கு இணங்காததற்காக வங்கி சாரா நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீதும் ரிசர்வ் வங்கி ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.