ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

9% சரிந்த பிண்ணாக்கு ஏற்றுமதி

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2025, 11:35 pm

Din

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 36,03,030 டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியா 39,74,351 டன் பிண்ணாக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

கடந்த ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் சோயாபீன் பிண்ணாக்கு ஏற்றுமதி 17.71 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 15.86 லட்சம் டன்னாக இருந்தது.

இருந்தாலும், மதிப்பீட்டு மாதங்களில் ராப்சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி 18,95,454 டன்னில் இருந்து 15,42,032 டன்னாகவும், ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஏற்றுமதி 3,27,261 டன்னில் இருந்து 2,58,005 டன்னாகவும் சரிந்துள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி 48,85,437 டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிண்ணாக்கு வகைகள் வங்கதேசம், தென் கொரியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.