குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

News image

பஞ்சாப் நேஷனல் வங்கி

Updated On :30 ஜூலை 2025, 8:24 pm IST

புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

அரசுக்குச் சொந்தமான வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,252 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் ரூ.32,166 கோடியிலிருந்து ரூ.37,232 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.31,964 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.28,556 கோடியாக இருந்தது.

வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.7,081 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.6,581 கோடியாக இருந்தது.

இருப்பினும், இந்தக் காலாண்டில் வரிச் செலவுகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ.5,083 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.2,017 கோடியாக இருந்தது.

ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் முதல் காலாண்டில் ரூ.323 கோடியாக குறைந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் ரூ.1,312 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.