புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
அரசுக்குச் சொந்தமான வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,252 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் ரூ.32,166 கோடியிலிருந்து ரூ.37,232 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.31,964 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.28,556 கோடியாக இருந்தது.
வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.7,081 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.6,581 கோடியாக இருந்தது.
இருப்பினும், இந்தக் காலாண்டில் வரிச் செலவுகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ.5,083 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.2,017 கோடியாக இருந்தது.
ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் முதல் காலாண்டில் ரூ.323 கோடியாக குறைந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் ரூ.1,312 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 19% உயர்வு!

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


