எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 143.91 புள்ளிகள் உயர்ந்து 81,481.86 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 33.95 புள்ளிகள் உயர்ந்து 24,855.05 ஆக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மும்பை: உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தன.

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 281.01 புள்ளிகள் உயர்ந்து 81,618.96 என்ற உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 143.91 புள்ளிகள் உயர்ந்து 81,481.86 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 33.95 புள்ளிகள் உயர்ந்து 24,855.05 ஆக நிலைபெற்றது.

அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து சந்தையின் ஏற்றம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஜூன் வரையான காலாண்டில், பன்னாட்டு நிறுவன ஆர்டர்களின் வலுவான வளர்ச்சியால், உள்கட்டமைப்பு நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29.8 சதவிகிதம் உயர்ந்ததையடுத்து அதன் பங்குகள் 4.87 சதவிகிதம் உயர்ந்தன.

சென்செக்ஸில் சன் பார்மா, என்டிபிசி, மாருதி, பாரதி ஏர்டெல், டிரென்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் எல் அண்ட் டி, டாடா கன்ஸ்யூமர், என்டிபிசி, சன் பார்மா, மாருதி சுசுகி ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ் $4.5 பில்லியன் Iveco ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் 3% க்கும் அதிகமாக சரிந்தது. வலுவான முதல் காலாண்டு வருவாய் காரணமாக எல் அண்ட் டி பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.4,636.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

ஸ்காட்லாந்திலிருந்து வாஷிங்டன் திரும்பும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு டிரம்ப் பதில் வருமாறு:

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகவில்லை என்ற நிலையில், வேறு எந்த நாட்டையும் விட அதிக வரிகளை இந்தியா விதிக்கிறது.

20 முதல் 25 சதவிகிதம் வரை அதிக அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருவதாக வெளியான செய்திகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், நான் அப்படித்தான் நினைக்கிறேன் என்றார்.

சந்தைகள் கலவையான குறிப்புகளுக்கு மத்தியில் ஓரளவு உயர்ந்து முடிந்தது. ஒரு சீரான தொடக்கத்திற்குப் பிறகு, நிஃப்டி இறுதியாக 24,855.05ல் நிலைபெற்றது.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் முடிந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிந்தன.

உலகளாவிய கச்சா எண்ணெய் 0.44 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 72.19 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com