டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2025, 2:29 pm

DIN

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

முன்மொழியப்பட்ட ஐபிஓ மூலம், பிங்கி அகர்வால் மற்றும் மனிஷ் அகர்வால் முறையே ரூ.841 கோடி மற்றும் ரூ.159 கோடி மதிப்புள்ள பங்கு பங்குகளை விற்க திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது ஆவணங்களை செபி-யிடம் அனுப்பிய நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை மாதத்தில் திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, நவம்பரில் ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்து, ஆரம்ப பங்கு விற்பனையை தொடங்க அனுமதி கோரியது. இதன் அடிப்படையில், மார்ச் 4, 2025 அன்று செபி அனுமதி கடிதத்தை வழங்கியது.

கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள உலகளாவிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஆட்சேர்ப்பு தீர்வுகளை வழங்கும் வழங்குநராக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கிரிசாக் அதன் தொழில்நுட்ப தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர்கள் மூலம் 72 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்தியது. 140 க்கும் மேற்பட்ட உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்துள்ள நிலையில், கிரிசாக் இதுவரை மிகுந்த கவனத்துடன் 3.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்துள்ளது.

2023ஆம் நிதியாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து ஒருங்கிணைந்த வருவாய், அதன் முந்தைய ஆண்டு ரூ.263.53 கோடியிலிருந்து 79.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.472.97 கோடியாக உள்ளது.

வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.67.76 கோடியிலிருந்து 65.50 சதவிகிதம் அதிகரித்து ரூ.112.14 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.