
சென்னை: தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 880 ஆக உயர்ந்துள்ளது.
வங்கி சமீபத்தில் ஓங்கோல், பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள பாகயம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளைத் திறந்தது. அதே வேளையில், கரூர் வைஸ்யா வங்கி நடப்பு நிதியாண்டில் 38 கிளைகளைத் திறந்துள்ளது என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதிய கிளைகள் மூலம் முழு அளவிலான வங்கி மற்றும் வணிக சேவைகளையும், மூன்றாம் தரப்பு அப்கள் மூலம் காப்பீட்டு சேவைகளையும் வழங்கும்.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,81,993 கோடி ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,605 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 9 நகரங்களில் 12% அதிகரித்த வீடுகள் விற்பனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.