டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!

தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக அறிவித்தது.

News image

கரூர் வைஸ்யா வங்கி - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2025, 7:46 pm IST

சென்னை: தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 880 ஆக உயர்ந்துள்ளது.

வங்கி சமீபத்தில் ஓங்கோல், பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள பாகயம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளைத் திறந்தது. அதே வேளையில், கரூர் வைஸ்யா வங்கி நடப்பு நிதியாண்டில் 38 கிளைகளைத் திறந்துள்ளது என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய கிளைகள் மூலம் முழு அளவிலான வங்கி மற்றும் வணிக சேவைகளையும், மூன்றாம் தரப்பு அப்கள் மூலம் காப்பீட்டு சேவைகளையும் வழங்கும்.

டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,81,993 கோடி ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,605 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.