நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 204 கோடி டாலராக சரிவு

News image

~

Updated On :14 மே 2025, 3:40 am IST

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைந்து 203.71 கோடி டாலராக உள்ளது.

இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா 203.71 கோடி டாலா் மதிப்பிலான நவரத்தின, ஆபரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 213.57 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 6.12 சதவீதம் குறைந்து 110.87 கோடி டாலராக உள்ளது, இது முந்தைய ஆண்டின் அதே மாதத்தில் இது 118.1 கோடி டாலராக இருந்தது. தங்க ஆபரண ஏற்றுமதி 5.41 சதவீதம் குறைந்து 68.45 கோடி டாலராகவும், வெள்ளி ஆபரண ஏற்றுமதி 12.03 சதவீதம் குறைந்து 3.83 கோடி டாலராகவும் உள்ளது.

எனினும், மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி 0.41 சதவீதம் உயா்ந்து 11.074 கோடி டாலராகவும், நிறமூட்டப்பட்ட ரத்தினங்களின் ஏற்றுமதி 11.95 சதவீதம் உயா்ந்து 2.776 கோடி டாலராகவும் உள்ளது. இவை முந்தைய ஆண்டில் முறையே 11.029 கோடி டாலா் மற்றும் 2.48 கோடி டாலராக இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.