வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஒன் மொபிக்விக் இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரிப்பு!

ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2025, 4:51 pm IST

புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.3.59 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், மொபிக்விக் வருவாய் 0.4% குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதன் வருவாய் இழப்பு ரூ.41.9 கோடியிலிருந்து சற்றே குறைந்துள்ளது என்றது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், நிறுவனத்திடம் 33 லட்சம் பயனர்களும் 71,000 வணிகர்களையும் இணைந்துள்ளதாக தெரிவித்தது.

செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, மொபிக்விக் 18.35 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களையும் 47.1 லட்சம் வணிகர்களையும் கொண்டுள்ளது என்றது.

2026 நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.285.7 கோடியாக இருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.286.8 கோடியாக இருந்தது.

கட்டண நுழைவாயில் செலவுகள் ரூ.133.9 கோடியாக இருந்தது. இதுவே நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.134.6 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் ஊழியர் நலச் செலவுகள் ரூ.35.3 கோடியாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் காலாண்டில் ரூ.43.5 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.