திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிரெடிட் கார்டில் செலவிடுவது அதிகரிப்பு! செப்டம்பரில் மட்டும் 2.17 லட்சம் கோடி!!

கிரெடிட் கார்டில் செலவிடுவது அதிகரித்துள்ளது, செப்டம்பரில் மட்டும் 2.17 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

News image

கிரெடிட் கார்டு - Center-Center-Delhi

Updated On :10 நவம்பர் 2025, 1:29 pm IST

நாட்டில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது 23 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மக்கள், கிரெடிட் கார்டு மூலம் 2.17 லட்சம் கோடி செலவிட்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு காரணமாக கடந்த செப்டம்பரில் அதிகளவில் கிரெடிட் கார்டு மூலம் செலவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 11.3 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், இது இந்த ஆண்டு தொடக்கத்தில் 10.6 கோடியாக இருந்ததாகவும் இது 7 சதவீதம் அதிகம்.

மாதந்தோறும், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்தது 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

செப்டம்பரில் சராசரியாக, ஒரு கிரெடிட் கார்டிலிருந்து ரூ.19,144 செலவிடப்பட்டிருப்பதாகவும், வங்கிகள் தரப்பில் அதிகமான கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுவது முன்னெடுக்கப்பட்டு வருவதும், பண்டிகைக் காலமும் இதற்குக் காரணமாக இருந்துள்ளது.

தனியார் வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவிட்டிருக்கும் தொகை, பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டில் செலவிடப்பட்டிருக்கும் தொகையைக் காட்டிலும் அதிகம் என்றும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் புள்ளிகள் போன்றவையும் அதிகம் செலவிடக் காரணங்களாக அமைந்துள்ளன.

செப்டம்பர் மாத நிறைவில், கிரெடிட் கார்டு கடன் தொகை ரூ.2.82 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் ரூ.2.89 லட்சம் கோடியை விட சற்றுக் குறைவு என்றாலும், கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் ரூ.2.72 லட்சத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், மறுபக்கம், நுகர்வு மற்றும் கடனை திரும்பச் செலுத்துவதிலும் மக்கள் கவனமுடன் இருப்பதாகவும், தங்களது நிதி நிலைமையை சரியாக நிர்வகித்து பெரும்பாலும் கடன் தொகை திரும்ப செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Summary

Credit card spending has increased, with Rs 2.17 lakh crore spent in September alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.