இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, நிலக்கரி இறக்குமதி செப்டம்பரில் 13.54% அதிகரித்து 220.5 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.
நிலக்கரி
நிலக்கரி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, நிலக்கரி இறக்குமதி செப்டம்பரில் 13.54% அதிகரித்து 220.5 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் 2-வது காலாண்டில், இதே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியானது 194.2 லட்சம் டன்னாக அதிகரித்தது.

நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 13.90 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2024 செப்டம்பர் முடிய இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியானது 13.24 மெட்ரிக் டன் என்ற நிலையில் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும்.

எஃகுத் துறைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி, கடந்த வருடம் 33.9 லட்சம் டன்னாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 45 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டு இதே காலத்தில் 91.92 மெட்ரிக் டன்னிலிருந்து 86.06 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் நிலக்கரி இறக்குமதி 28.18 மெட்ரிக் டன்னிலிருந்து 31.54 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாக எம்ஜங்க்ஷன் சர்வீஸ் தொகுத்த வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு முயற்சிகள் மூலம் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

Summary

The country coal import surged by 13.54 per cent to 22.05 million tonnes in September, driven by increased demand of the dry fuel ahead of the festive season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com