திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

புதுதில்லி முதல் ஷாங்காய் இடையேயான இடைவிடாத விமானங்களை பிப்ரவரி 1, 2026 முதல் மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா இன்று அறிவித்துள்ளது.

News image

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

Updated On :17 நவம்பர் 2025, 8:02 pm IST

மும்பை: புதுதில்லி முதல் ஷாங்காய் இடையேயான இடைவிடாத விமானங்களை பிப்ரவரி 1, 2026 முதல் மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா இன்று அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் சீனாவுக்கு விமான சேவையை இயக்க உள்ளது.

ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு பிறகு 2026ல் மும்பை முதல் ஷாங்காய் இடையே இடைவிடாத விமான சேவையை அறிமுகப்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

வேறு எந்த விமான நிறுவனத்தையும் விட சர்வதேச அளவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏர் இந்தியா குழுமத்தின் 48வது சர்வதேச இடமாக ஷாங்காய் உள்ளது.

ஏர் இந்தியா புதுதில்லி மற்றும் ஷாங்காய் இடையே வாரத்திற்கு நான்கு முறை அதன் போயிங் 787-8 விமானத்தைப் இயக்கும். இதில் 18 படுக்கைகள் மற்றும் 238 விசாலமான இருக்கைகள் உள்ளன.

Summary

Air India on Monday announced the resumption of its non-stop flights between Delhi and Shanghai, effective 1 February 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.