விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

சந்தை தேவையை பூர்த்தி செய்ய, வாகனத்தின் உற்பத்தியை அதிகரித்ததால், செப்டம்பர் மாதம் மாருதி சுசுகி இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

News image
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்
Updated On :3 அக்டோபர் 2025, 1:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: சந்தை தேவையை பூர்த்தி செய்ய, வாகனத்தின் உற்பத்தியை அதிகரித்ததால், செப்டம்பர் மாதம் மாருதி சுசுகி இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த மாதம் நாடு முழுவதும் சுமார் 2,01,915 கார்களை உற்பத்தி செய்தது. இதுவே செப்டம்பர் 2024ல் இது 1,59,743 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் 12,318 ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார்களை உற்பத்தி செய்த நிலையில், அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 12,155 கார்களாக இருந்தது.

பலேனோ, செலெரியோ, டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளிட்ட சிறிய கார்களின் உற்பத்தியை செப்டம்பர் மாதம் 93,301 கார்களாக அதிகரித்தது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் இது 68,413 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் சியாஸின் உற்பத்தி எதுவும் இல்லை என்றாலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,687 நடுத்தர அளவிலான செடானை விற்பனைக்கு அனுப்பி வைத்தது.

பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஃபிராங்க்ஸ் போன்ற பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 27 சதவிகிதம் உயர்ந்து 79,496 கார்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 62,752 கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஈகோ வாகன உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் 11,702 வாகனங்களிலிருந்து 13,201 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

சூப்பர் கேரி எல்சிவி உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,034 கார்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் அது 3,599 கார்களாக அதிகரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், மாருதி சுசுகி மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 3 சதவிகிதம் அதிகரித்து செப்டம்பரில் 1,89,665 கார்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.