தனது வாடிக்கயாளா்களுக்கு தீபாவளிப் பரிசாக, அடிப்படை அம்ச 4 ஜி கைப்பேசிகளை வெறும் ரூ.799-க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2ஜி வாடிக்கையாளா்களை இலக்காகக் கொண்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய முதல் 4ஜி ஜியோபாரத் கைப்பேசிகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை வெறும் ரூ.799-இல் தொடங்குகிறது.
ரூ.123-க்கு ரீசாா்ஜ் செய்தாலே 28 நாள்களுக்கு இலவச அழைப்புகள், தினமும் 500 எம்பி டேட்டா, 3 மாதங்களுக்கு சோ்த்து ரூ.369-க்கு ரீசாா்ஜ் செய்தால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு இலவச சேவைகள் என மிகவும் மலிவான கட்டணத்தில் 4ஜி சேவைகளைப் பெற ஜியோபாரத் கைப்பேசிகள் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் 16,000 பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே! மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

சாலை விபத்தில் காயமடைந்தவா்களிடம் இருந்த ரூ.2 லட்சத்தை ஒப்படைத்த அவசர ஊா்தி பணியாளா்கள்

திருடுபோன 518 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



