மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏற்றத்தில் பங்குச் சந்தை! 350 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image
பங்குச் சந்தை- ANI
Updated On :10 அக்டோபர் 2025, 5:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,075.45 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 341.34 புள்ளிகள் அதிகரித்து 82,513.44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.25 புள்ளிகள் உயர்ந்து 25,282.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

4 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச்சந்தை கடந்த புதன்கிழமை சரிவடைந்த நிலையில் நேற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து 2-ஆவது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.18 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் 100, 0.28 சதவீதமும் உயர்ந்தது.

துறை ரீதியாக, நிஃப்டி ரியாலிட்டி சுமார் 1.5 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது, தொடர்ந்து பொதுத்துறை வங்கி, எஃப்எம்சிஜி, நிதி சேவைகள், ஆட்டோ, பார்மா, ஹெல்த்கேர், நுகர்வோர் பொருள்கள், ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவை ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 1.4 சதவீதம் குறைந்துள்ளது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா அதிக லாபம் ஈட்டிய அதே நேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

summary

Stock market: SENSEX rises nearly 350 points, NIFTY50 reclaims 25,250

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.