தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4.87% உயர்ந்து ரூ.50.99 கோடியாக உள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2025, 7:48 pm IST

புதுதில்லி: ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4.87% உயர்ந்து ரூ.50.99 கோடியாக உள்ளது. அதன் கொள்முதல் செலவுகள் அதிகரித்த போதிலும் வருவாய் அதிகரித்தது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.48.62 கோடியாக இருந்த போதிலும், அதன் மொத்த வருவாய் ரூ.1,112.5 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், செலவுகள் ரூ.957.49 கோடியாக இருந்தது.

பாதகமான வானிலை மற்றும் கொள்முதலில் விலை உயர்வு உள்ளிட்ட சவால்கள் இருந்தபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 9% உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

காலாண்டில் கொள்முதல் அளவுகள் நாள் ஒன்றுக்கு 2.1 சதவிகிதம் குறைந்து 16.1 லட்சம் லிட்டராக இருந்தது. அதே நேரத்தில் சராசரி பால் கொள்முதல் விலை 6.3% அதிகரித்து லிட்டருக்கு ரூ.42.8 ஆக இருந்தது.

பால் விற்பனை அளவு நாள் ஒன்றுக்கு 1.1 சதவிகிதம் அதிகரித்து 12.1 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ள நிலையில், அதன் சராசரி விற்பனை விலை 4.5% அதிகரித்து, லிட்டருக்கு ஒன்றுக்கு ரூ.57 ஆக உயர்ந்தது என்றது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் வருவாய் 14.8% அதிகரித்து ரூ.341.7 கோடியாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 31.4% பங்களிப்பு.

வருவாயில் 34% உயர்ந்து ரூ.58.1 கோடியாக இருந்த நிலையில், வரிக்கு முந்தைய லாபம் 80% அதிகரித்து ரூ.5.4 கோடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.