பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் சுமார் 27% குறைந்து ரூ.183.21 கோடியாக உள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்தது.

Published On :

புதுதில்லி: செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் சுமார் 27% குறைந்து ரூ.183.21 கோடியாக உள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் இன்று தெரிவித்தது.

கடந்த வருடம் டாடா கம்யூனிகேஷன்ஸ் ரூ.251.02 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் ஈட்டியது. அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த ஒருங்கிணைந்த வருமானம் 6.49% அதிகரித்து ரூ.6,099.75 கோடியாக உள்ளது. இது செப்டம்பர் 2024 காலாண்டில் ரூ.5,727.85 கோடியாக இருந்தது என்றது.

இந்த காலாண்டில் டிஜிட்டல் போர்ட்ஃபோலியோவில் அடைந்த இரட்டை இலக்கு வளர்ச்சியை நாங்கள் தக்க வைத்துள்ளோம். அதே வேளையில் புதிதாக அறிமுகப்படுத்திய வாய்ஸ் ஏஐ மற்றும் கிளவுட் நெட்வொர்க்கிங் ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளருக்கு பிரத்தியேகமான ஆர்வத்தை உருவாக்கி வருவதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ். லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் தரவு வருவாய் ரூ.4,826 கோடியிலிருந்து 7.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,179 கோடியாக இருந்தது. அதே வேளையில், குரல் வழியான தீர்வுகள் மூலம் டாடா கம்யூனிகேஷனின் வருவாய் 4.5 சதவிகிதம் குறைந்து ரூ.405.96 கோடியாக உள்ளது. இதுவே செப்டம்பர் 2024 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.425.48 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.