
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவடைந்தது. ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய லாபத்தைப் பதிவு செய்தது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையின் காரணமாக உள்நாட்டு சந்தைகள் கிட்டத்தட்ட 0.70% வரை உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பலவீனமான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஒரே இரவில் ஏற்பட்ட சரிவும் ரூபாயை வெகுவாக ஆதரித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 88.74 ஆக வர்த்தகமாகி ரூ.88 என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்து, டாலருர் ஒன்றுக்கு ரூ.87.93 என்ற உச்சத்தைத் தொட்டது. இறுதியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.06 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாயக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத அளவான ரூ.88.81 ஆக இருந்தது.
இதையும் படிக்க: ஆசிய பங்குகள் உயர்வு எதிரொலி: எழுச்சியில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.