எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆசிய பங்குகள் உயர்வு எதிரொலி: எழுச்சியில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 575.45 புள்ளிகள் உயர்ந்து 82,605.43 ஆகவும், நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து 25,323.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :15 அக்டோபர் 2025, 5:37 pm IST

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், உலகளாவிய சந்தைகளில் இருந்து வந்த நேர்மறையான குறிப்புகளும், அதன் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் நிதிப் பங்குகளை வாங்கியதன் காரணமாக, பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 575.45 புள்ளிகளும், நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 697.04 புள்ளிகள் உயர்ந்து 82,727.02 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 575.45 புள்ளிகள் உயர்ந்து 82,605.43 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து 25,323.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிலையில், ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, ட்ரெண்ட், அல்ட்ராடெக் சிமென்ட், எடர்னல் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. இருப்பினும் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிந்து முடிந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிரென்ட், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி-யில் உயர்ந்தும் அதே வேளையில் இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரந்து முடிவடைந்தன.

அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்த நிலையில், ரியாலிட்டி குறியீடு 3 சதவிகிதம் வரை உயர்ந்தது. மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், பொதுத்துறை வங்கி, உலோகம் மற்றும் தொலைத்தொடர்பு குறியீடுகள் 1-2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், இரண்டாவது காலாண்டு லாபம் உயர்ந்தததால், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் பங்குகள் 7 சதவிகிதம் வரை அதிகரித்தது. கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பங்குகளை விற்பனை செய்ததால் அதன் பங்குகள் 8% வரை சரிந்தன. 2-வது காலாண்டு வருவாய் சரிந்ததால், சையண்ட் டிஎல்எம் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தன.

ஐசிஐசிஐ லோம்பார்ட் பங்குகள் 2-வது காலாண்டு லாபத்தை அடுத்து 8% வரை உயர்ந்தன. பெங்களூரு அருகே கோத்ரேஜ் பிராபர்டீஸ் நிலத்தை வாங்கியதால் அதன் பங்குகள் 3.5% வரை உயர்ந்தன. வாரண்டுகள் மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்டியதில் வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் பங்குகள் 6 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 62.28 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,508.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,661.13 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

மகாராஷ்டிர வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி பைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், கனரா வங்கி, ஆர்.பி.எல் வங்கி, எடர்னல், எம்.சி.எக்ஸ் இந்தியா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.