தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை! மெட்டல், பார்மா துறை பங்குகள் உயர்வு!

சிறு, குறு நிறுவனங்களின் பங்குகள் இறங்கு முகத்தில் வணிகமாகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2025, 10:30 am IST

பங்குச் சந்தை வணிகம் இன்று (அக். 29) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 88 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகிலும் வணிகம் தொடங்கியது.

காலை 10.30 மணி நிலவரப்படி மெட்டல் மற்றும் பார்மா துறை பங்குகள் ஏறுமுகத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 88 புள்ளிகள் உயர்ந்து 84,663 ஆக வணிகமானது. காலை 10.30 மணி நிலவரப்படி 313.27 புள்ளிகள் உயர்ந்து 84,941 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.

இதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வணிக நேரத் தொடக்கத்தில் 25,982 புள்ளிகளாக வணிகமானது. காலை 10.30 மணி நிலவரப்படி 112.60 புள்ளிகள் உயர்ந்து 26,061புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.

22 நிறுவனப் பங்குகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளில் 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வணிகமாகி வருகின்றன. எஞ்சிய 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்படுகின்றன.

அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 2.31% அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதானி போர்ட்ஸ் 2.08%, என்டிபிசி 1.71%, பவர் கிரிட் 1.63%, எச்.சி.எல். டெக் 1.53%, சன் பார்மா 1.13%, ரிலையன்ஸ் 1.05%, இன்ஃபோசிஸ் 0.97% உயர்ந்துள்ளன.

இதேபோன்று ஈடர்னல் -0.99%, எம்&எம் -0.57%, பஜாஜ் ஃபைனான்ஸ் -0.34%, ஆக்சிஸ் வங்கி -0.17% சரிவுடன் வணிகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.