
ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!
இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

பங்குச் சந்தை நிலவரம் - IANS
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 1) காலை 79,828.99 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 261.67 புள்ளிகள் அதிகரித்து 80,071.32 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை அதிகரித்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.25 புள்ளிகள் உயர்ந்து 24,519.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஃபோசிஸ், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், டிசிஎஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டெக் எம், ட்ரென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.2 சதவீதம் உயர்ந்தன.
நிஃப்டி ஐடி இன்று சுமார் 1.4 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் அடைந்தது. இதைத் தொடர்ந்து நிஃப்டி பொதுத்துறை வங்கி, ஆட்டோ துறைகள் தலா 0.5 சதவீதம் உயர்ந்தன.
Summary
Stock Market Updates: Sensex gains 300 pts, Nifty near 24,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





