ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!
பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர் லிமிடெட்.


புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகளின் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும்போது, இன்று 1 சதவிகிதம் வரை உயர்ந்து பங்குச் சந்தையில் வர்த்தகமானது.
பிஎஸ்இ-யில் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும் போது, இன்று அதிகபட்சமாக ரூ.92.50 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.89 சென்ற நிலையில் முடிவில் ரூ.91.66 ஆக நிலைபெற்றது.
என்எஸ்இ-யில், பங்கின் விலை ரூ.92 ஆக பட்டியலிடப்பட்டது. பிறகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.91.73 ஆக முடிவடைந்தன.
நிறுவனத்தின் சந்தை மதிப்பீடானது ரூ.487.19 கோடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...