மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image
பங்குச் சந்தை- IANS
Updated On :4 செப்டம்பர் 2025, 6:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 395.05 புள்ளிகள் அதிகரித்து 80,962.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.40 புள்ளிகள் உயர்ந்து 24,821.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்று(செப். 3 ) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக இருந்த 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை ரத்து செய்து 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம் பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

துறைகளில், நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.3 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு (1.7 சதவீதம்), ரியாலிட்டி (1.3 சதவீதம்), நிதி சேவைகள் (1 சதவீதம்) உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

எம் & எம், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ட்ரெண்ட், பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

summary

Stock Market Updates: Sensex gains 400 pts, Nifty near 24,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.