ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 7.25 புள்ளிகள் குறைந்து 80,710.76 புள்ளிகளாகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 6.70 புள்ளிகள் அதிகரித்து 24,741 ஆக நிலைபெற்றது.

News image
மும்பை பங்குச் சந்தை
Updated On :5 செப்டம்பர் 2025, 12:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்த நிலையில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முந்தைய முடிவில் இருந்து மாற்றமின்றி 7 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தன.

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, 30-பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் 7.25 புள்ளிகள் குறைந்து 80,710.76 புள்ளிகளாகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 6.70 புள்ளிகள் அதிகரித்து 24,741 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா 2.34 சதவிகிதம் உயர்ந்ததும், அதைத் தொடர்ந்து மாருதி 1.70 சதவிகிதம் உயர்ந்தது. அதே வேளையில் பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல் மற்றும் எடர்னல் ஆகியவை உயர்ந்து முடிந்தன. இருப்பினும் ஐடிசி, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன. ஆனால் முக்கிய குறியீடுகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியதால், சரிந்த நிலையில் இருந்து மீண்டது இந்திய பங்குச் சந்தை. அதே வேளையில் ஆட்டோ துறை பங்குகளில் இன்றயை வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

உலகளாவிய நேர்மறையான குறிப்புகளும் பங்குச் சந்தைக்கு மேலும் ஆதரவை அளித்தன. அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கைக்கு முன்னதாக அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

ஐரோப்பாவில் சந்தைகள் உறுதியான நிலையில் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.106.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,233.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.07 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.93 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

summary

Benchmark stock indices Sensex and Nifty closed unchanged after a volatile session on Friday as gains in oil & gas and auto shares were offset by losses in IT and FMCG shares.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.