மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image
Updated On :10 செப்டம்பர் 2025, 6:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,504.36 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 376.01 புள்ளிகள் அதிகரித்து 81,477.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118.65 புள்ளிகள் உயர்ந்து 24,987.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு, இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதல் நாள் ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்ந்த நிலையில் நேற்று ஐடி பங்குகள் உயர்ந்தன.

இன்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தில் இருந்து வருகின்றன. ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன.

எம்&எம், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எந்த சிரமமும் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதையடுத்து பங்குச்சந்தை நேர்மறையுடன் வர்த்தகமாகி வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலை 0.87% உயர்ந்து ஒரு பேரல் 66.95 டாலராக உள்ளது.

summary

Sensex, Nifty jump in early trade amid hopes of successful conclusion in India-US trade talks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.