புது தில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி கணிசமாகக் குறைந்ததால் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 2,650 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பூா்வாங்க தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு 3,510 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6.7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் ஏற்றுமதி 3,289 கோடி டாலராக இருந்தது.
இருந்தாலும், முந்தைய 2025 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது. அப்போது இந்தியாவில் இருந்து 3,724 கோடி டாலா் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 10 சதவீத வருடாந்திர சரிவைக் கண்டு 6,159 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதம் இது 6,853 கோடி டாலராக இருந்தது. 2025 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையிலும் (6,459 கோடி டாலா்) கடந்த ஆகஸ்டில் இறக்குமதி குறைந்துள்ளது.
இதன் காரணமாக, வா்த்தகப் பற்றாக்குறை (வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்புக்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் இடையிலான இடைவெளி) கடந்த ஆகஸ்ட் மாதம் 2,649 கோடி டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் அது 3,564 கோடி டாலராக இருந்தது. 2025 ஜூலை மாதத்தில் இந்தப் பற்றாக்குறை 2,735 கோடி டாலராக இருந்தது.
பெட்ரோலியப் பொருள்கள் தவிா்த்த பிற பொருள்களின் ஏற்றுமதி, 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 7.35 சதவீதம் உயா்ந்து வலுவாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியும் 2025 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9,743 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,846 கோடி டாலராக இருந்தது.
2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 20.76 சதவீதம் குறைந்துள்ளது. 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 4,039 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,421 கோடி டாலராக இருந்தது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலா்

இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 15.5% அதிகரிப்பு

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு

ஜிடிபி-ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.6%-ஆக குறையக்கூடும்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



