நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றத்தைத் தொடர்ந்து மதர் டெய்ரி அதன் பால் மற்றும் உணவு வரிசையில் விலை குறைப்பை அறிவித்தது.

News image
Updated On :16 செப்டம்பர் 2025, 7:32 pm IST

சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றத்தைத் தொடர்ந்து மதர் டெய்ரி அதன் பால் மற்றும் உணவு வரிசையில் விலை குறைப்பை அறிவித்தது. இது நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக அமையும் என்றது.

அதே வேளையில் செப்டம்பர் 22 முதல் இந்த விலை பட்டியல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Story image

பல அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை நீக்கியதை தொடர்ந்து இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. மதர் டெய்ரி இது குறித்து தெரிவிக்கையில், தற்போது அனைத்து சலுகைகளும் பூஜ்ஜிய வரி வரம்புக்குள் அல்லது குறைந்தபட்சம் 5% அடுக்கில் வரும் என்றது.

பன்னீர், வெண்ணெய், சீஸ், நெய், மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இனி மலிவு விலையில் கிடைக்கும் என்றது.

500 கிராம் வெண்ணெய் பேக்கின் விலை ரூ.305ல் இருந்து ரூ.285 ஆகக் குறையும். அதே நேரத்தில் பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ரூ.35க்கு பதிலாக ரூ.30க்கு இனி கிடைக்கும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.