மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

News image
கோப்புப்படம்- IANS
Updated On :16 செப்டம்பர் 2025, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,852.11 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 357.23 புள்ளிகள் அதிகரித்து 82,142.98 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103.50 புள்ளிகள் உயர்ந்து 25,172.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

8 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச் சந்தை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் நேர்மறையில் வர்த்தகமாவது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஆட்டோ பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றம் கண்டு வருகின்றன.

மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பவர்கிரிட் ஆகியவை இன்று முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் டைட்டன், ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையால் டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.

summary

Stock market: Sensex up 350 pts, Nifty above 25,150

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.