நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் பேயான்!

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் பேயான் கார் பற்றி...

News image

பிரிட்டனில் விற்பனையிலுள்ள ஹூண்டாய் பேயான் - Photo: Hyundai website

Updated On :6 பிப்ரவரி 2026, 1:29 pm IST

ஹூண்டாய் நிறுவனம், பேயான் என் லைன் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள பேயான் மாடல் கார் தற்போது சில அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏற்கெனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் ஐ-20 மாடலிவிட சற்று மாறுபட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்தில், சிறிது பெரிதாக பேயான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி ஃப்ராங்ஸ் மாடல் காருக்கு போட்டியாக பேயான் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேயான் மாடலின் முன்புற பம்பர்கள், கிரில்கள், ஏர் டாம் ஆகியவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்.டி. ஹெட்லைட்கள் மற்றும் டி.ஆர்.எல். தொழில்நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், வெனு மற்றும் ஐ20 மாடல்களில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வும் கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் வருகின்ற அக்டோபரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த காரின் விலை ரூ. 8 முதல் 12 லட்சம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The Hyundai Bayon is being launched in India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.