உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!
இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (பிப். 11) உயர்வுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகிலும் வணிகம் தொடங்கியது.
எய்ச்சர், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வணிகத்தைத் தொடங்கின. எனினும் சில நிமிடங்களில் சென்செக்ஸ், நிஃப்டி சரியத் தொடங்கின.
வணிகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 62 புள்ளிகள் உயர்ந்து 84,339 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. எனினும் சில நிமிடங்களில் (10 மணி நிலவரப்படி) 84,282 புள்ளிகள் வரை சரிந்து வணிகமாகி வருகிறது.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை வணிகம் நிஃப்டி 25,998 புள்ளிகளாக வணிகம் தொடங்கியது. பின்னர் சில நிமிடங்களில் 24 புள்ளிகள் சரிந்து 25,959 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
காலை 10 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எம் & எம் நிறுவனப் பங்குகள் 2.39% உயர்ந்து வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மாருதி சுசூகி 1.47%, டைட்டன் கம்பெனி 1.47%, எஸ்பிஐ 0.55%, இன்டர்குளோம் 0.49%, ரிலையன்ஸ் 0.31%, பஜான் ஃபின்சர்வ் 0.18% உயர்ந்திருந்தன.
இதேபோன்று இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், எடர்னல், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
நிஃப்டி பட்டியலில் எய்ச்சர் மோட்டார்ஸ், பிலிப்ஸ் கார்பன், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், பிரிட்டானியா, கேஜே டயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
Stock market Opening Bell Sensex gains 65 points, Nifty near 26,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

