

மும்பை: வெளிநாட்டு நிதி வருகை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான வர்த்தகம் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.67 ஆக நிறைவடைந்தன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய ரூபாயின் உயர்வு சற்று தடைபெற்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.60 ஆக தொடங்கி ரூ.90.60 முதல் ரூ.90.71 என்ற வரம்பில் வர்த்தகமானது. பிறகு நேற்றையை வர்த்தக முடிவிலிருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.90.67 ஆக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.