

மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவிடம் அந்நிய செலாவணி கையிருப்பு 8.663 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 725.727 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:
பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 6.711 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்து 717.064 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதுவே ஜனவரி மாதத்தில் உள்ள கையிருப்பு 723.774 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் டாலர் உள்பட பிற கையிருப்பு 3.55 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 573.603 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதே வேளையில், தங்க இருப்பு மதிப்பு 4.99 பில்லியன் டாலர் அதிகரித்து 128.466 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் இருப்பு நிலையும் இந்த வாரத்தில் 19 மில்லியன் டாலர் அதிகரித்து 4.734 பில்லியன் டாலராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.