புதுதில்லி: ரூ.590 கோடி மோசடி புகாரை அடுத்து இன்றயை வர்த்தகத்தில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவுடன் நிறைவடைந்தன.
தனியார் துறை கடன் வழங்குநரான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹரியானா அரசு வைத்திருக்கும் கணக்குகளில் ரூ.590 கோடி மோசடியை வெளிப்படுத்தியதையடுத்து அதன் பங்குகள் 20 சதவீதம் சரிந்தன.
பிஎஸ்இ-யில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பங்குகளின் மதிப்பு 19.99 சதவீதம் சரிந்து ரூ.66.85 ஆக முடிவடைந்தன.
மோசடியாக கணக்குகளைத் தொடங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹரியானா அரசு, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியுடன் சேர்ந்து, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை எந்தவொரு அரசு வணிகத்தையும் மேற்கொள்வதிலிருந்து விலக்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்குகள் 7.62 சதவீதம் சரிந்து ரூ.950.50 ஆக முடிவடைந்தன. இதற்கிடையில், இந்த விஷயத்தில் நாங்கள் எவ்வித தவறும் செய்யவில்லை என்று ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மறுத்துள்ளது.
Summary
Shares of IDFC First Bank tumbled 20 per cent on Monday after the private sector lender disclosed a Rs 590-crore fraud committed by its employees and others in accounts held by the Haryana government.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 9% சரிவு!

இரு தனியார் வங்கிப் பங்குகள் கடும் சரிவு: ரூ.590 கோடி மோசடியால் ஹரியாணா அரசு தடையின் எதிரொலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


