நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரூ. 8.13 லட்சத்தில் கவாசாகியின் புதிய மாடல் அறிமுகம்!

கவாசாக்கி வல்கான் எஸ் மற்றும் இசட் 650 ஆர்.எஸ். பைக்குகள் அறிமுகம்...

News image

கவாசாக்கி வல்கான் எஸ் - Photo: Website / Kawasaki Vulcan

Updated On :7 ஜனவரி 2026, 4:05 pm IST

கவாசாக்கி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய வல்கான் எஸ் மற்றும் இசட் 650 ஆர்.எஸ். ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வல்கான் எஸ் மாடலின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், இ20 எரிபொருள் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் முக்கிய மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது.

முன்பிருந்த பியர்ல் மேட் கிரீன் வண்ணத்துக்கு பதிலாக மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இசட் 650 எஸ் மாடலைப் பொருத்தவரை இபோனி பெயிண்ட்டுக்கு பதிலாக ஓசன் ப்ளூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வல்கான் எஸ் மாடலின் எடை முன்பிருந்ததைவிட 6 கிலோ அதிகமாக 235 கிலோவாக உள்ளது. இ20 விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சில மேம்படுத்தல் செய்யப்பட்டு, அதே 649 சிசி, பேரலல் ட்வின் என்ஜின் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பைக்கின் என்ஜின் 60.1 பிஎச்பி திறனையும், 61 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

வல்கான் எஸ் ஷோரூம் விலை ரூ. 8.13 லட்சமாகவும், இசட் 650 ஆர்.எஸ். விலை ரூ. 7.83 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Summary

Kawasaki Vulcan S bike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.