டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சென்செக்ஸ் 780 புள்ளிகள் சரிவு! 500% வரிவிதிப்பு மசோதா எதிரொலி.. 4-வது நாளாக வீழ்ச்சி!!

பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கத்தால் சென்செக்ஸ் 780 புள்ளிகள் வரை சரிந்ததைப் பற்றி...

News image
Updated On :8 ஜனவரி 2026, 6:05 pm IST

சென்செக்ஸ் - நிஃப்டி: பங்குச் சந்தையில் தொடரும் கரடியின் ஆதிக்கத்தால் மும்பை பங்குச் சந்தை எண் குறியீடு எண் சென்செக்ஸ் வியாழக்கிழமை 780 புள்ளிகள் வரை சரிந்தது.

அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள், வெனிசுவேலா மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச்சந்தை கடந்த 3-4 நாள்களாக மிகவும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை மற்றும் பலவீனமான ஆசிய சந்தைகள் குறித்த கவலைகளால் சென்செக்ஸ் 780 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்த வாரத்தில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவைச் சந்தித்த மும்பை பங்குச் சந்தை ஒரே நாளில் 780.18 புள்ளிகள் சரிந்தவுடன் இன்றைய நாள் முடிவில், 84,180.96 என நிறைவடைந்தது. இது இன்றைய நாள் வர்த்தகத்தில் 0.92 சதவிகித சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி (0.51%), பஜாஜ் பைனான்ஸ்(0.33%), பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எட்டர்னல்ஸ்(0.93%) ஆகிய பங்குகள் கணிசமான லாபம் பார்த்தன.

அதேவேளையில், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, இஸ்போஸிஸ், எல் அண்ட் டி, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பல முன்னணி பங்குகளும் சரிவை சந்தித்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 780.18 புள்ளிகள் சரிந்து 84,180.96 ஆகவும், நிஃப்டி 263.90 புள்ளிகள் சரிந்து 25,876.85 கீழ் இறங்கி நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதம் சரிந்தன.

ஏசியன் பெயிண்ட்ஸ் 1.25 சதவிகிதம், லார்சன் அண்ட் டூப்ரோ 1.39 சதவிகிதம் மற்றும் இன்ஃபோசிஸ் 1.39 சதவிகிம், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.44 சதவிகிதம், டாடா ஸ்டீல் 1.52 சதவிகிதம் , பஜாஜ் ஃபின்சர்வ் 1.55 சதவிகிதம் சரிந்தன. டெக் மஹிந்திரா 2.04 சதவிகிதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.10 சதவிகிதம், டிசிஎஸ் 2.21 சதவிகிதம் சரிந்தன.

எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், பொதுத்துறை வங்கிகள் 2-3 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை ஒப்புதல் அளித்தார். இதனால், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், கே.பி.ஆர். மில், பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ், அபெக்ஸ் ஃப்ரோஸன் ஃபுட்ஸ், அவந்தி ஃபீட்ஸ் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 9 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்தன.

வெள்ளி விலை கிலோ ரூ.2.5 லட்சத்திற்கும் கீழே சென்றதால், இந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 6 சதவிகிதம் சரிந்தன.

Summary

Bears tightened their grip on Dalal Street as Indian equity benchmarks extended losses for the fourth consecutive session on January 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.