மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 8 லட்சம் கோடி இழப்பு! பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!! ஏன்?

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியில் வர்த்தகமாவது பற்றி...

News image
- ANI
Updated On :4 மார்ச் 2026, 8:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று முன்தினம்(மார்ச் 2) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் 2-ம் நாளாக இன்றும்(மார்ச் 4) இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,528.82 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் பிற்பகல் 1.25 மணி நிலவரப்படி 1,215.22 புள்ளிகள் சரிந்து 1,215.22 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 404.95 புள்ளிகள் குறைந்து 24,460.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இஸ்ரேல் - ஈரான் போர்

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் உள்ளன. 5 ஆவது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சில பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பங்குகள் விற்பனை

வர்த்தக நிலைத்தன்மை இல்லாததால் பங்குகள் அதிகமாக இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாலரும் பங்குகளை விற்று வருகின்றனர்.

இதுவரை ரூ. 8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

எண்ணெய் வளம் அதிகமுள்ள ஈரான் தற்போது போர் நடத்திவருவதால் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் சுமார் 85% இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பணவீக்கம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பங்குச்சந்தை தற்போது நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாகவும் இது எவ்வளவு காலம் தொடரும் என்று கூற முடியாது என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவுக்கு எண்ணெய் விலை உயர்வு அதனால் பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் இருக்கலாம் என்கின்றனர்.

உலக பங்குச்சந்தைகளும் சரிவு

தென் கொரியாவின் கோஸ்பி பங்குச்சந்தை கடுமையாகச் சரிவைச் சந்தித்ததால் 20 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.