பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு, ரூ.5,786.4 கோடி திருத்தப்பட்ட வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்வதாக நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக மாருதி சுஸுகி நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த விளக்கத்தில், ‘2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கீட்டில், நிறுவனம் தாக்கல் செய்த வருமானத்தில் சில திருத்தங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ரூ.5,786.4 கோடி கூடுதல் வரியைச் செலுத்தக் கோரி வரைவு மதிப்பீட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்கிறோம். இந்த வரி நோட்டீஸ் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்: வரி நோட்டீஸ் செய்தி வெளியான போதிலும், பங்குச் சந்தையில் மாருதி சுஸுகி பங்குகள் எழுச்சியுடன் காணப்பட்டன. வா்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 1.88 சதவீதம் அதிகரித்து, ரூ.12,993.55-ஆக நிலைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

22.6.1976: தி.மு.க. தலைவர்களிடம் பெரும் தொகை கறுப்புப் பணம் கண்டுபிடிப்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்






