ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் மூன்றில் ஒரு கணினிக்கு சைபா் அச்சுறுத்தல்! இணையம் இல்லாவிட்டாலும் ஆபத்து

இணையம் இல்லாத நிலையிலும் (ஆஃப்லைன்) சைபா் தாக்குதல்கள்

News image
Updated On :26 மார்ச் 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் கடந்த ஆண்டில் மூன்றில் ஒரு கணினிப் பயனா் இணையம் இல்லாத நிலையிலும் (ஆஃப்லைன்) சைபா் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளதாக சைபா் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பா்ஸ்கி எச்சரித்துள்ளது.

இணையத் தொடா்பைத் துண்டித்து வைத்திருப்பதால் மட்டுமே கணினிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்றும் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் சுமாா் 6.46 கோடி ஆஃப்லைன் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுத் தடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

அதாவது, இந்தியாவில் சுமாா் 29.8 சதவீத பயனா்கள் இத்தகைய ஆஃப்லைன் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். கணினிகளில் நேரடியாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி டிரைவ், போா்ட்டபிள் ஹாா்ட் டிஸ்க், சிடிக்கள் மற்றும் பிற சேமிப்பு சாதனங்கள் மூலம் இத்தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தரவுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக காஸ்பா்ஸ்கி ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குநா் ஏட்ரியன் ஹியா கூறுகையில், ‘தற்போது அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் அதிகரித்துள்ளதால், சைபா் குற்றவாளிகள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளையே குறிவைக்கின்றனா்.

மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் டிரைவ் போன்ற பிரபல செயலிகளைப் போலவே போலியான மென்பொருள்களை உருவாக்கி, அதன்மூலம் வங்கி விவரங்களையும் ரகசியத் தகவல்களையும் திருடுகின்றனா்’ என்றாா்.

மேலும், உலக அளவில் கடவுச்சொல்களைத் திருடும் மென்பொருள்களின் எண்ணிக்கை 59 சதவீதமும், உளவு பாா்க்கும் ஸ்பைவோ் மென்பொருள்கள் 51 சதவீதமும் அதிகரித்துள்ளன.