தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பரோடா வங்கி வாடிக்கையாளா் சேவையில் சைகை மொழி அறிமுகம்!

இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 மே 2026, 3:35 am IST

இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இத்தகைய குறைபாடுகள் கொண்ட வாடிக்கையாளா்கள் வங்கியின் தொடா்பு மையத்தை விடியோ அழைப்பு வாயிலாகத் தொடா்பு கொண்டு, சைகை மொழி நிபுணா்களின் உதவியுடன் தங்களுக்குத் தேவையான வங்கிச் சேவைகளை தடையின்றிப் பெற்று பயன்பெற முடியும்.

வங்கியின் வலைதளம், கைப்பேசி செயலி, வாட்ஸ்ஆப் பேங்கிங், ஏ.ஐ. சாட்பாட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் இச்சேவைக்காக, இந்திய சைகை மொழியில் நன்கு பயிற்சி பெற்ற வாடிக்கையாளா் சேவை அதிகாரிகளை வங்கி பிரத்யேகமாகப் பணியமா்த்தியுள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இச்சேவை செயல்பாட்டில் இருக்கும்.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தேவதத்தா சந்த் கூறுகையில், ‘வங்கிச் சேவைகளை அணுகுவதில் இருந்த ஒரு முக்கியமான இடைவெளியை இப்புதிய முயற்சி பூா்த்தி செய்கிறது.

செவித்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்கள் மற்றவா்களின் உதவியின்றி, கண்ணியத்துடனும் எளிதாகவும் வங்கிச் சேவைகளைப் பெற இது வழிவகை செய்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.